News December 28, 2025
அரியலூர்: மணல் கடத்தியர் தப்பி ஓட்டம் – போலீசார் தேடல்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அறங்கோட்டை பகுதிகளில் நேற்று(டிச.27) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுக்குச் செல்லும் சாலையின் வழியாக வந்த மாட்டு வண்டியை சோதனை செய்ய முயன்ற போது, மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் வண்டியை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
Similar News
News January 18, 2026
அரியலூர்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

அரியலூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்.
1. உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும்.
2. பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும்.
3. பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும்.
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 18, 2026
அரியலூர் மக்களே! இது உங்களுக்கு தெரியுமா?

அரியலூர் மாவட்ட மக்களே! உங்கள் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை மற்றும் அது என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா?
1. நகராட்சிகள்
அரியலூர்
ஜெயங்கொண்டம்
2. பேரூராட்சிகள்
உடையார்பாளையம்
வரதராஜன்பேட்டை
3. ஊராட்சி ஒன்றியங்கள்
செந்துறை
ஆண்டிமடம்
ஜெயங்கொண்டம்
அரியலூர்
தா.பழூர்
திருமானூர்
இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!
News January 18, 2026
அரியலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலார்கள் நலவாரியத்தின் மூலம் உதவித்தொகை பெற்று அல்லது பெற விண்ணப்பித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அரியலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தரிவித்துள்ளார்.


