News December 28, 2025

குமரி: போதையில் நேர்ந்த சோகம்!

image

புதுக்கடை விரிவிளை பகுதி கொத்தனார் செல்வராஜ் (60) நேற்று (டிச.27) மது போதையில் மனைவியுடன் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். மனைவி பணம் கொடுக்க மறுத்ததால், போதையில் வீட்டு கண்ணாடி ஜன்னலை கையால் உடைத்தார். இதில் கையில் பலத்த காயம் அடைந்து அவர் மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்ற போது பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News

News January 13, 2026

அருமனையில் 2 முதலைகள் நடமாட்டத்தால் பீதி

image

களியல் கோதையாறில் முதலை பீதி அகலாத நிலையில் தற்போது அருமனை அருகே கல்லுவரம்பு கோதையாறு பகுதியில் 2 முதலைகள் நடமாடியதை பார்த்து சிலர் அதனை படம் பிடித்துள்ளனர். இந்த முதலைகள் பாறை மீது கிடப்பதை போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரு கிறது. இதனால் அம்பலக்கடை, கொக்கஞ்சி, கோட்டக்ககம் பகுதி மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர் . முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 13, 2026

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் டெண்டர் கோரப்பட்டுள்ளது

image

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தின் ஒருபகுதி கருங்கல் சுவரை பழமை மாறாமல் மீண்டும் கட்டும் பணிக்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளி அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 13, 2026

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் டெண்டர் கோரப்பட்டுள்ளது

image

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தின் ஒருபகுதி கருங்கல் சுவரை பழமை மாறாமல் மீண்டும் கட்டும் பணிக்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளி அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!