News December 28, 2025
குமரி: போதையில் நேர்ந்த சோகம்!

புதுக்கடை விரிவிளை பகுதி கொத்தனார் செல்வராஜ் (60) நேற்று (டிச.27) மது போதையில் மனைவியுடன் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். மனைவி பணம் கொடுக்க மறுத்ததால், போதையில் வீட்டு கண்ணாடி ஜன்னலை கையால் உடைத்தார். இதில் கையில் பலத்த காயம் அடைந்து அவர் மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்ற போது பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News December 29, 2025
குமரி: இழப்பீடு வழங்க எம்.எல்.ஏ வலியுறுத்தல்

அகஸ்தீஸ்வரம் நாடான்குளம் – கொட்டாரம் இடைப்பட்ட பகுதியில் உள்ள பன்றி குன்று குளம் உடைந்து 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News December 29, 2025
குமரி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News December 29, 2025
குமரி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <


