News December 28, 2025
கடலூர்: ரோந்து அதிகாரிகள் எண் அறிவிப்பு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (27.12.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில், ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
கடலூர்: தேவை இல்லாத CALL-களை தடுக்க சூப்பர் வழி!

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News January 19, 2026
கடலூர்: காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் புதிதாக 71 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகையின் பரிந்துரையின் பேரில், அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ஜி. வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவராக பி.ஜே. சித்தார்த்தன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
News January 19, 2026
கடலூர்: 1,379 பேர் மீது வழக்கு பதிவு

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் ஜன.14 முதல் ஜன.17 வரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் வாகன ஒட்டிய 29 பேர், மொபைல் போன் பேசிய படியே வாகனம் இயக்கிய 33 பேர், ஹெல்மெட் அணியாத 567 பேர், சீர் பெல்ட் அணியாத 10 பேர், இதர விதிமீறல்களில் 720 பேர் என மொத்தம் 1,379 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


