News December 28, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.28) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜ், தோப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். இரவு வேலை செய்யும் பெண்களுக்கு பகிரவும்!
Similar News
News December 30, 2025
தருமபுரியில் விலை உயர்வு!

தருமபுரி உழவர்சந்தைக்கு கடந்த சில வாரங்களாக முருங்கைக்காய் வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்தது. பின்னர் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. இந்த நிலையில் சந்தைக்கு வரத்து மீண்டும் குறைந்ததால் நேற்று முருங்கைக்காய் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்தது. தருமபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. தனியாக ஒரு முருங்கைக்காய் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
News December 30, 2025
தருமபுரி குறிஞ்சி கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு ஆலோசனை!

தருமபுரி ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று(டிச.29) மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் P.K.கைலாஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் துறை அலுவலர்கள் பங்கு பெற்றனர். பின், உணவு தரத்தை மேம்படுத்த கலந்துரையாடினர்.
News December 30, 2025
தருமபுரி குறிஞ்சி கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு ஆலோசனை!

தருமபுரி ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று(டிச.29) மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் P.K.கைலாஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் துறை அலுவலர்கள் பங்கு பெற்றனர். பின், உணவு தரத்தை மேம்படுத்த கலந்துரையாடினர்.


