News December 28, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று டிச.27 இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 29, 2025
நாமக்கல்: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

நாமக்கல் மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே<
News December 29, 2025
நாமக்கல்லில் 354 வழக்குகள் பதிவு!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு அடிதடி, வாகனங்கள் மூலம் விபத்து ஏற்படுத்தியது. பெண்களுக்கு தொல்லை ஏற்படுத்தியது. பண மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 270 வழக்குகள், அதேபோல கொல்லிமலையில் உள்ள வாழவந்தி நாடு போலீஸ் நிலையத்தில் இந்த ஆண்டு இதுவரை 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
News December 29, 2025
நாமக்கல் அருகே அதிரடி தடை விதிப்பு!

கொல்லிமலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக அங்கிருந்து பாய்ந்து வந்த வெள்ள நீரால் பொம்மசமுத்திரம் ஏரி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் PWDன் ஒப்பந்தத்துடன் ஒப்பந்ததாரர்கள் அந்த ஏரியில் மீன்களை வளர்த்து வருகின்றனர். இதையடுத்து அங்கு அனுமதியின்றி மற்றவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை நீர்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.


