News December 28, 2025
திருப்பூர்: பயிற்சி முடிந்து காவல் படையில் மோப்ப நாய் ‘சக்தி’

திருப்பூர் மாநகர காவல் ஆணையரால் பெயரிடப்பட்ட ‘சக்தி’ என்ற மோப்ப நாய், கோவையில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆறு மாத பயிற்சி பெற்றது. பயிற்சி முடிவடைந்த நிலையில் திருப்பூர் மாநகர காவல் மோப்ப நாய் படையில் இன்று சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது இனி மாநகர பகுதி காவல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
Similar News
News January 2, 2026
பல்லடத்தில் அதிரடி நடவடிக்கை

பல்லடம் அடுத்த அறிவொளி நகர் வாய்க்கால் மேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வழியே வந்த லாரி ஒன்றை மடக்கி பிடித்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து லாரியை சோதனையிட்ட போது அதில் குட்கா பொருட்கள் இருந்து தெரிய வந்தது. மேலும் லாரி மற்றும் 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News January 2, 2026
திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு

திருப்பூர், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News January 2, 2026
திருப்பூர்: கல்லூரி மாணவன் தற்கொலை

திருப்பூர், திருமுருகன்பூண்டியை அடுத்த தேவராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக். இவருடைய மகன் ரியாக் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனளிக்காதால் மனமுடைந்து நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


