News May 1, 2024
சிறப்பு அலங்காரத்தில் நஞ்சுண்டேஸ்வரர்

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் சர்க்கார் பழைய பாளையம் ஏரிக்கரை அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்மையார் உடனுறை ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி ஆலயத்திற்கு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டல பூஜை நடைபெற்று வருகின்றது. 34 ஆவது நாள் மண்டல அபிஷேக பூஜையில் மூலவர் ஸ்ரீ பார்வதி அம்மையார் மற்றும் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Similar News
News November 28, 2025
நாமக்கல்: டிகிரி இருந்தால் BOI வங்கியில் வேலை!

நாமக்கல் மக்களே, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (BOI), காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 28, 2025
நாமக்கல்லில் இலவசம்.. மிஸ் பண்ணாதீங்க!

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 1,429 சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு, இணையதள வழியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.
News November 28, 2025
கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ. 2 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.98-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 610 காசுகளாக நீடித்து வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை


