News December 27, 2025
சிவகங்கை: டூவீலர் விபத்தில் இளம் பெண் பரிதாப பலி

திருக்கோஷ்டியூா் அருகேயுள்ள சாமந்தப்பட்டியைச் சோ்ந்த சின்னக்கருப்பன் மகள் திவ்யா (21). இவா், தனது பெரியம்மா மகன் ரஞ்சித்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மாவடிக்கண்மாய் அருகே இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் திவ்யா பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை திருப்பத்தூா் அரசு மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News February 7, 2026
சிவகங்கை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.<
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News February 7, 2026
சிவகங்கை: இளைஞர் குத்திக் கொலை;ஒருவர் கைது

காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (26). இவரும், இவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து நேற்று பேயன்பட்டி ஜீவா நகரை சேர்ந்த பாண்டி என்பவரிடம் கஞ்சா கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பாண்டி கத்தியால் நந்தகுமாரை சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிந்து பாண்டியை கைது செய்தனர்.
News February 7, 2026
சிவகங்கை: துணை ஜனாதிபதி வருகை.!

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பிப்ரவரி 22 ம் தேதி வருகை தர உள்ளார். துணை ஜனாதிபதியுடன் வரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கென 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


