News December 27, 2025
தருமபுரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News January 16, 2026
தருமபுரி: கணவன் தூக்கிட்டு தற்கொலை!

அரூர், இட்லபட்டியை சேர்ந்த தொழிலாளி வேடியப்பன் (40). இவரது மனைவி குடும்ப பிரச்சினையினால் சில நாட்களுக்கு முன் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன் வேடியப்பன் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தார். மீண்டும் அவர் தாயார் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த வேடியப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 16, 2026
தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.16) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.22, கத்தரிக்காய்: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.30, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.20, கொத்தவரை: ரூ.45, பச்சைமிளகாய்: ரூ.36, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
News January 15, 2026
இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன-15) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சதீஸ் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் ,தோப்பூரில் வேலண் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


