News May 1, 2024
கோவை: கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் பபிஷா(18). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜிஐஎஸ்எல் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று காதல் பிரச்சனையில் விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளார். அவரை மீட்ட சக மாணவிகள் சிகிச்சைக்காக கேஜி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
TNAU-வில் 2 நாள் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி (25.11.2025 மற்றும் 26.11.2025) ஆகிய 2 நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News November 22, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (22.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
கோவை வரும் CM ஸ்டாலின்

வரும் நவ.25, 26 ஆகிய தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்கிறார். நவ.25-ம் தேதி கோவை மாவட்டத்தில் செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்து தொழில்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் . முதலமைச்சர் முன்னிலையில் பல தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. முதல்வர் வருகைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


