News December 27, 2025

வடமதுரையில் வசமாக சிக்கிய 3 பேர்!

image

வடமதுரை அருகே பிலாத்து பகுதியில், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது உப்புக்குளம் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட மாயவன் (36, வாலிசெட்டிபட்டி), பெரிய பொன்னன் (28, மலைப்பட்டி), மணிமாறன் (26,வடமதுரை) ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சேவல்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News December 28, 2025

திண்டுக்கல்: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

image

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> https://parivahansewas.com/<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News December 28, 2025

பழனி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

கோவையில் இருந்து டிசம்பர் 29ம்தேதி திங்கட்கிழமை இரவு 7:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல்,மதுரை,ராமநாதபுரம் வழியாக மறுநாள் 30ம்தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.அதேபோல மறுமார்க்கத்தில் டிசம்பர் 30ம்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 10:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் டிசம்பர் 31ம்தேதி புதன்கிழமை காலை 7:30 மணிக்கு கோவை சென்றடையும்.

News December 28, 2025

வேம்பார்பட்டி பள்ளிவாசலில் ஐயப்ப பக்தர்கள்!

image

திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியில் உள்ள ஐயப்பன் கோயிலில், ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் மண்டல பூஜை மற்றும் அன்னதான விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் ஐயப்ப சேவா சங்கத்தினர், முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்குச் சென்று ஹஸ்ரத் முன்னிலையில் துவா செய்தனர். பின்னர் கோயிலில் மண்டல பூஜை, அன்னதானம் மற்றும் திருவீதி ரத ஊர்வலம் நடைபெற்றது.

error: Content is protected !!