News December 27, 2025
சிவகங்கை: துப்புரவு பணியாளர் கீழே விழுந்து உயிரிழப்பு

சிவகங்கை நகராட்சி மற்றும் அரசு மருத்துவமனை பகுதிகளில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த அபிமன்னன் (45), அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்குச் சென்ற போது இட்லி துணியை காய வைக்கும் போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 8, 2026
சிவகங்கை: பொங்கல் பரிசு.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிட்ட தேதியில் மட்டும் சென்று சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி செய்தி குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.
News January 8, 2026
சிவகங்கை: இடம் வாங்க ரூ.5 லட்சம் பெறலாம் – APPLY

சிவகங்கை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் உள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News January 8, 2026
சிவகங்கை: பெற்றோர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைய கீழ்க்கண்ட தகுதியுள்ள சிறப்புப் பிரிவைச் சார்ந்த (SC/ST) பயனாளிகள் அருகில் உள்ள இ- சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சமூகநல அலுவலக 04575-240426 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்


