News December 27, 2025

தென்காசி முக்கிய ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

image

தென்காசி நெல்லையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7:00 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை 28ஆம் தேதி முதல் இந்த ரயிலில் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு வகுப்பு ஏசி பெட்டி இணைக்கப்படுகிறது. இதனால் கூடுதல் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்பதிவு நடக்கிறது.

Similar News

News December 31, 2025

தென்காசி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா.?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 31, 2025

தென்காசி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

News December 31, 2025

தென்காசி: புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகள்

image

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல் கூடாது. மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இன்று இரவு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!