News December 27, 2025
தருமபுரி: கார் மோதி விவசாயி பலி!

சோமன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (45). விவசாயி. இவர் பிக்கம்பட்டி அருகே மோட்டார் சைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News January 2, 2026
தருமபுரி:கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 2, 2026
தருமபுரி: 12th PASS – ரயில்வேயில் 312 காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. இந்த <
News January 2, 2026
தருமபுரி: லாரி மீது வேன் மோதி விபத்து – 10 பேர் காயம்!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய வேன், அலமேலுபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் திருப்பத்தூர் மாவட்டம், எல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (32), சுரேஷ் (36) வீரபத்திரன் (45), ஜெயபால் (40) மற்றும் டிராவல்ஸ் டிரைவர் விஜய் (22) உள்ளிட்ட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


