News December 27, 2025

திருப்பத்தூர் மாவட்டம் சாதனை!

image

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதூா், மேலூா், மேல்பட்டு, சோ்க்கானூா், ஜோன்றம்பள்ளி, தாதனவலசை, சின்ன சமுத்திரம், சின்ன பேராம்பட்டு, புள்ளூா், மோட்டூா், ரங்காபுரம் உள்ளிட்ட 44 கிராமங்கள் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் புகையிலை பொருள்களை பயன்படுத்துவதில்லை. மேலும், இந்த கிராமங்களில் புகையிலை விற்பனையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 30, 2025

திருப்பத்தூரில் பயங்கர தீ விபத்து!

image

திருப்பத்தூர் நகராட்சி ஆசிரியர் நகர் பகுதியை அடுத்த அண்ணான்டப்பட்டியில் மனோன்மணி என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று (டிச.29) திடீரென மின்கசிவு காரணமாக குடிசை தீ பற்றி எரிந்தது. புகையைக் கண்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 30, 2025

திருப்பத்தூர்: மகளுக்கு விஷம் கொடுத்த கொடூர தந்தை!

image

காந்திநகரை சேர்ந்த நகை தொழிலாளி மணிகண்டன் (50) மகள் கெஜலட்சுமி (23). இவர் கோவை தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் ஆதியூரை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். மகளின் காதல் பிடிக்காததால், மணிகண்டன், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த மகளுக்கு நேற்று முன்தினம் மாதுளம் பழத்தில் விஷம் கலந்து கொடுத்து தானும் அதே பழத்தை சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News December 30, 2025

திருப்பத்தூர்: தம்பி மனைவியிடம் ஆபாசப் பேச்சு!

image

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வெங்கட் சமுத்திரம் ஊராட்சி கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவரின் மனைவி மாலதி(40). கூலித் தொழிலாளியான இவரிடம் இவரது கணவனின் அண்ணன் குமார்(55) தினசரி ஆபாசமாக பேசுவது, சண்டை போடுவது என இருந்து வந்துள்ளார். இதுகுறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் மாலதி புகாரின் பேரில் குமாரை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!