News December 27, 2025
உயில் எழுதவில்லை என்றாலும் சொத்து கிடைக்கும்!

உயில் எழுதாத ஒரு இந்துவின் சொத்துகள், 3 நிலைகளில் பிரித்தளிக்கப்படுகிறது. முதல் நிலையில் இறந்தவரின் மகன், மகள், தாய் ஆகியோருக்கு சொத்து பங்கிடப்படும். முதல் நிலை இல்லாமல் இருந்தால், 2-ம் நிலையில் உள்ள சகோதர சகோதரிகள், மருமகன்கள், மருமகள்களுக்கு அளிக்கப்படும். இவை இரண்டும் இல்லாமல் இருந்தால், 3-ம் நிலையான தந்தையின் உறவினர்கள் (அ) தாயின் உறவினர்களுக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 13, 2026
உங்களுக்கு இந்த ஃபோபியா இருக்கா?

ஏதோ ஒன்றின் மீது ஏற்படும் அதீத அச்ச உணர்வையே ஃபோபியா என்று கூறுகின்றனர். பயம் பொதுவாக அர்த்தமுள்ளதாக இருக்காது. ஆனால் அதை உணருபவர்களுக்கு அது உண்மையானது. மக்களிடையே பொதுவாக காணப்படும் அச்சங்கள் மற்றும் அதற்கு என்ன ஃபோபியா என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு என்ன பயம் இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
News January 13, 2026
சுதந்திரத்திற்கு பின் முதல்முறை அலுவலகம் மாறும் PM

நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் ₹20,000 கோடியில் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிரதமர் அலுவலகத்திற்கான (PMO) புதிய கட்டட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ‘சேவா தீர்த்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் பொங்கலுக்கு பிறகு PM மோடி பணியை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரம் பெற்றது முதல் ‘சவுத் பிளாக்’ பகுதியில் இயங்கி வந்த PMO முதல்முறையாக மாற உள்ளது.
News January 13, 2026
சுதாவின் அடுத்த பட ஹீரோ யார்?

‘பராசக்தி’ வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் அப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டாராம். சிம்பு அல்லது துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை அவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கடந்த காலங்களை போல் ஒவ்வொரு படங்களுக்கும் 6 ஆண்டுகள், 4 ஆண்டுகள் என இடைவெளி எடுக்காமல் இம்முறை உடனடியாக படத்தை இயக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


