News December 27, 2025
புதுவை: திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் கலெக்டர் ஆய்வு

காரைக்கால், திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என, கலெக்டர் ரவிபிரகாஷ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும், காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 30, 2025
புதுவை: குளத்தில் மூழ்கிய கூலித்தொழிலாளி பலி

காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(29). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் குளத்தில் மீன் பிடித்தபோது திடீரென குளத்தில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காலாப்பட்டு தீயணைப்பு வீரர்கள், ராஜாவை தேடினர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் ராஜாவை நேற்று மதியம் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
News December 30, 2025
புதுவை: ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை சமர்பிக்க உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதவர்கள்
விபரங்களை சமர்பிக்க கல்விதுறை உத்தரவு. புதுவை கல்வித்துறை
இணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்கள், தகுதி பெறாத ஆசிரியர்கள் விபரங்களை வரும் 31-ந் தேதி முன்பாக கூகுள் படிவம் மூலம் கல்வித்துறையில் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
News December 30, 2025
புதுவை: ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை சமர்பிக்க உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதவர்கள்
விபரங்களை சமர்பிக்க கல்விதுறை உத்தரவு. புதுவை கல்வித்துறை
இணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்கள், தகுதி பெறாத ஆசிரியர்கள் விபரங்களை வரும் 31-ந் தேதி முன்பாக கூகுள் படிவம் மூலம் கல்வித்துறையில் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


