News December 27, 2025

காஞ்சிபுரம்: திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை!

image

உத்திரமேரூர் ஒன்றியம் அண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் மணிகண்டன் (25). டிரைவராக வேலை செய்து வந்த இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், திருமணமாகாத ஏக்கத்தில் வயிற்று வலிக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இவர் இறந்தார்.

Similar News

News January 19, 2026

காஞ்சிபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் ஜனவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 2,000 பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்த உள்ளன. 10, 12, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

காஞ்சிபுரம்: உங்க குறைகளை புகார் செய்ய ஒரு கிளிக் போதும்!

image

காஞ்சி மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART’ <<>>இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

காஞ்சி: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!