News December 27, 2025

புதுச்சேரி: உதவித்தொகை உயர்வு அறிவிப்பு

image

புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் ரூ.1,000 உதவித் திட்டம், ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு விரைவில் வழங்கப்படும். மேலும், கோதுமை போல் 1 கிலோ கேழ்வரகு மாவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

Similar News

News December 27, 2025

புதுவை: கையில் வெட்டு-கூலித்தொழிலாளி படுகாயம்

image

லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி ராஜசேகரன் (52). இவர் சம்பவத்தன்று பிச்சை வீரன்பேட்டில் ஒரு கட்டடத்தின் 3வது மாடியில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது பலகையை எந்திரம் மூலம் வெட்டியபோது, எதிர்பாராத விதமாக அவரது வலது கையில் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 27, 2025

புதுவை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

புதுவை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவனங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி உதவுங்க…

News December 27, 2025

புதுவை: போலி மருந்து வழக்கு CBI-க்கு மாற்றம்

image

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தை CBI விசாரிக்க உள்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் இதுவரை 16-நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கை CBI மற்றும் NIA விசாரிக்க துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இந்த நிலையில், இவ்வழக்கை CBI-க்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!