News December 27, 2025

செய்யூர் தொகுதியில் செங்கல்பட்டு கலெக்டர் சினேகா ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட செய்யூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா, துறை சார்ந்த அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். திருவாதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Similar News

News January 16, 2026

செங்கை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News January 16, 2026

செங்கை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

செங்கை வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

News January 16, 2026

செங்கை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

image

செங்கை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!