News December 27, 2025
நாமக்கல்: ஜல்லிக்கட்டு நடத்த 5 விண்ணப்பங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த இதுவரை 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு, அரசின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 16, 2026
நாமக்கல்: திருமண தடை நீங்க இங்க போங்க!

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் எயிலிநாதர் கோயில் அமைந்துள்ள. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கோயிலை முதலாம் ராஜராஜசோழனும், அவரது மகன் ராஜேந்திரசோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. மேலும், கி.பி.10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது. இங்கு திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க பிரார்த்திக்கலாம். SHARE பண்ணுங்க!
News January 16, 2026
அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

நாமக்கல் மாவட்டத்தில் முன்மாதிரி திருநங்கையர் விருது பெற, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இவ்விருது பெற தகுதியான திருநங்கைகள், அரசின் இணையதளத்தில் மட்டும் வரும் பிப். 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 16, 2026
நாமக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


