News May 1, 2024
சுவிட்சர்லாந்தில் ரகசிய AI ஆய்வு கூடம் அமைத்த ஆப்பிள்

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ரகசியமாக AI ஆய்வுக் கூடத்தை ஆப்பிள் நிறுவனம் அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. AI தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய தயாரிப்புகளை பல்வேறு நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. இதற்கு ஆப்பிளும் விதிவிலக்கல்ல. கூகுளில் இருந்து 36 AI நிபுணர்களை பணியில் அமர்த்தி, ரகசிய ஆய்வு கூடம் மூலம் புதிய தயாரிப்புகளை ஆப்பிள் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
Similar News
News August 11, 2025
ரோஹித்- கோலியின் Future? கங்குலி பதில்!

2027 ODI WC-ல் ரோஹித் & கோலியை விளையாட வைக்க BCCI விரும்பவில்லை என்றும், அவர்கள் இந்த ஆண்டே ODI-ல் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இருவரும் நன்றாக ரன்குவிக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் எனக் கூறினார். மேலும், இருவரும் ODI-ல் நிறைய சாதித்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
News August 11, 2025
அதிமுக ஆட்சியில் திருப்பூர் புறக்கணிக்கப்பட்டது: CM

திருப்பூர் மாவட்டத்தில் ₹950 கோடியில் முடிவுற்ற 61 திட்டப்பணிகளை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ADMK ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். DMK ஆட்சியில் ₹10,491 கோடியில் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். அத்திக்கடவு-அவிநாசி திட்டமும் DMK ஆட்சியில்தான் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
US செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் இஸ்ரோ

அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் 2 மாதங்களில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். 6,500 கிலோ எடையுள்ள பிளாக்-2 ப்ளூபேர்டு செயற்கைக்கோள் 2 மாதங்களில் விண்ணில் ஏவப்படும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே ஜூலை 30-ம் தேதி நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த <<17251055>>NISAR <<>>செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது குறிப்பிடத்தக்கது.