News December 27, 2025

தென்காசியில் இன்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (27.12.2025) காலை 06.30 மணி அளவில் நீர் நில பறவைகள் கணக்கெடுக்கும் பணியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை, மாரநேரி குளம்.(குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தகவல்.

Similar News

News December 30, 2025

நபார்டு வங்கியின் திட்ட அறிக்கை வெளியீடு – கலெக்டர்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.12.2025) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (MSME) மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் (District Lead Bank) சார்பில் நடைபெற்ற கடனுதவி வழங்கும் முகாமில் நபார்டு (NABARD) வங்கியின் 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டார்.

News December 30, 2025

தென்காசி மக்களே… நாளையே கடைசி…!

image

தென்காசி மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே, நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை இங்கே <>கிளிக் செய்து <<>>சரிபார்த்து கொள்ளலாம்.

News December 30, 2025

தென்காசி: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <>விண்ணப்ப<<>> படிவத்தை நிரப்பி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் கொடுக்கலாம். தகவல்களுக்கு 14408 என்ற எண்ணிற்கு அழையுங்கள். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!