News May 1, 2024

குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்திடுக

image

பழனி அடிவாரத்தில் உள்ள 8 வார்டுகளுக்கு கோடைகால நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைந்து போனது. பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் லாக்கி இருந்து நீர்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என மார்க் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News

News March 14, 2026

திண்டுக்கல்: கொத்தாக தூக்கிய அமைச்சர் சக்கரபாணி

image

திண்டுக்கல், கீரனூர் பகுதியில் அதிமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி, அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் சி.இராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், P.C. தங்கம், கா.பொன்ராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இணையும் நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகிகள் பலரும் திமுகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனர்.

News March 14, 2026

திண்டுக்கல்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 14, 2026

திண்டுக்கல்லில் கொந்தளித்த நிர்வாகி!

image

திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சி.மகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் எரிவாயு உருளைகள் இல்லாததால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பிரச்னையை எதிா்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுகளை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

error: Content is protected !!