News December 26, 2025

குமரி: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

image

குமரி மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.

Similar News

News December 31, 2025

குமரி: கதவை உடைத்து 16 பவுன் நகை திருட்டு

image

பார்வதிபுரத்தை சேர்ந்த அல்ஜின்டேனி(35) ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரும், இவரது மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரள மாநிலம் சென்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 16 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News December 31, 2025

குமரி: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <>விண்ணப்ப <<>>படிவத்தை நிரப்பி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் கொடுக்கலாம். தகவல்களுக்கு 14408 என்ற எண்ணிற்கு அழையுங்கள். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 31, 2025

நாகர்கோவில் – தாம்பரம் ரயில் 45நி முன்னதாக சென்றடையும்

image

நாளை முதல் பல்வேறு ரயில்களின் வேகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் வழக்கம் போல் பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு 45 நிமிடங்கள் முன்னதாக காலை 5.05 மணிக்கு சென்னை சென்றடையும். இதே போல் தாம்பரம் – நாகர்கோவில் ரயில் ஐந்து நிமிடம் முன்னதாக நாகர்கோவில் வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!