News May 1, 2024
ஈரோடு: மே 2ல் மாணவர் சேர்க்கை

ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. இதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இதில் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து கட்டணமும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 9487247205, 0424-2294365 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
கைத்தறி போர்வையில் திருக்குறள் வடிவமைத்த நெசவாளர்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் காலனியைச் சேர்ந்த 71 வயது முதியவர் துரைசாமி, தனது ஓய்வு நேரத்தில் கைத்தறிப் போர்வையில் வண்ண நூல்களால் 10 திருக்குறள்களை நுணுக்கமாக வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இந்த கலைப் படைப்பினை அவர் பசுவபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பரிசாக வழங்கினார். இவரது இந்த நற்செயலையும் விடாமுயற்சியையும் அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
News March 18, 2026
ஈரோடு: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க
News March 18, 2026
கோபி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

கோபிசெட்டிபாளையம் அடுத்த உக்கரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரித்து வருகிறார். இவர் இன்று மாலை சாலையோரம் நடந்த சென்ற பொழுது டி.ஜி.புதூர் பகுதியில் பிரதாப் என்ற இளைஞர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


