News December 26, 2025

நெல்லை: பீஸ் இல்லாமல் இலவச வக்கீல் வேண்டுமா?..

image

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04575-242561
தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 27, 2025

நெல்லை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 27, 2025

நெல்லை: போலீசாரை வெட்ட முயற்சி; இருவருக்கு வலைவீச்சு

image

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ரோந்து சென்ற போலீசார், நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய சுரேஷ், ஐயப்பன் ஆகியோரைப் பிடிக்க முயன்றனர். போலீசாரை அவதூறாக பேசிய இருவரும் அரிவாளால் வெட்ட முயன்று தப்பி ஓடினர். சப்-இன்ஸ்பெக்டர் கணபதி புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த களக்காடு போலீசார், ரவுடி சுரேஷ் உட்பட இருவரையும் தேடி வருகின்றனர்.

News December 27, 2025

நெல்லை: போலீசாரை தாக்கிய இருவர் கைது

image

பாளை தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் தலைமையில் காவலர் கார்த்திக் ராஜா, அரியகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நொச்சிகுளம் பாலசுந்தர் என்பவர் வந்த ஆட்டோவை நிறுத்திய போது காவலர் கார்த்திக் ராஜாவை தனது தந்தை சகோதரருடன் சேர்ந்து தாக்கினார் இது குறித்து போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து பாலசுந்தர் அவரது சகோதரர் கனகராஜை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!