News December 26, 2025
21 ஆண்டுகளை கடந்தும் ஓயாத சுனாமியின் துயரம் (PHOTOS)

ஆழிப்பேரலையின் தாண்டவத்தால் TN-ல் சுமார் 8,000 பேர் உயிரிழந்த துயரம் நிகழ்ந்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தாய், தந்தை, பிள்ளைகள் என உறவுகளை இழந்தவர்கள் ஆறாத வடுவுடன் கண்ணீர் மல்க கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். எனது உறவுகளை திருப்பிக்கொடு என கடல் அன்னையிடம் ஒரு சிலர் மன்றாடியது காண்போரின் நெஞ்சங்களை உலுக்கியது. கடல் அலைகள் எழுப்பும் ஒலி அவர்களின் காதில் சோக கீதமாகவே ஒலிக்கிறது.
Similar News
News December 27, 2025
90’s கிட்ஸ் நிலைமையை பாத்தீங்களா?

நாளுக்கு நாள் 90’s கிட்ஸ் பெண் தேடும் படலம் மீம்ஸ் போடும் அளவிற்கு பரிதாபமாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் கடலூரை சேர்ந்த இளைஞரோ, ’மணப்பெண் தேவை’ என தனது ஆட்டோவில் கலர்புல் விளம்பரம் செய்து பெண் தேடி வருகிறார். அதில் ஜாதி, மதம் தடையில்லை, வரதட்சணை தேவையில்லை. டிகிரி போதும் என மணப்பெண் தகுதியாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பாவம் 90’s கிட்ஸ் என நெட்டிசன்கள் பரிதாபப்படுகின்றனர்.
News December 27, 2025
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் ₹20,000 விலை மாறியது

தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக்கொண்டு தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. <<18682690>>தங்கம் இன்று சவரனுக்கு ₹880<<>> உயர்ந்த நிலையில், வெள்ளி கிலோவுக்கு ₹20,000 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹274-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,74,000-க்கும் விற்பனையாகிறது. இது முதலீடு நோக்கத்தில் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
News December 27, 2025
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்: சேகர்பாபு

பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை கலைக்கப்படும் என H.ராஜா தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ‘அத்தைக்கு மீளை முளைத்தால் தான் அவர் சித்தப்பா; முதலில் அவரை ஒரு தொகுதியில் நின்று வெல்ல சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டார். H.ராஜாவுக்கு எதிராக திமுக சாதாரண தொண்டனை நிறுத்தி மண்ணை கவ்வ வைக்கும் என்றும் கூறினார். பாஜக அவரை கண்டுகொள்ளாததால் இப்படி பேசிவருவதாகவும் தெரிவித்தார்.


