News December 26, 2025

திருவாரூர்: டாஸ்மாக் பாரின் கதவை உடைத்து திருட்டு

image

கொரடாச்சேரி அருகே கமலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (53). இவர் கமலாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இவர் டிச.24 பார் கதவை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் நேற்று காலையில் திரும்பி வந்து பார்த்தபோது பாரின் கதவு உடைக்கப்பட்டு, ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிசென்றதாக முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில், கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 28, 2025

திருவாரூர்: தீரா நோய்களை தீர்க்கும் கோயில்

image

வலங்கைமான் வட்டம், நரிக்குடியில் எமனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் எமதர்ம ராஜாவுக்கென அமைந்துள்ள சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலில் அமைந்துள்ள ஊற்றில் சுரக்கும் நீரைப் பருகினால் தீராத நோய்களும் உடனடியாக குணமாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் பிதுர்தோஷம் நீங்க, துர்மரணம் ஏற்படாமல் இருக்கவும் பக்தர்கள் இத்தலத்தில் உள்ள எமனை தரிசிக்கின்றனர். SHARE NOW

News December 28, 2025

திருவாரூர்: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

image

திருவாரூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே<> Mparivaahan <<>>செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை உங்கள் போனில் ஈஸியா பெறலாம். இந்த டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரப்பூர்வம் என்பதால், போலீசாரிடமும் லைசன்ஸை, ஆர்.சி புக் டிஜிட்டல் ஆவணங்களை காண்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 28, 2025

திருவாரூர்: ரூ.2 லட்சம் வரை காப்பீடு

image

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!