News December 26, 2025
தஞ்சை: பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குலமங்கலம் மாரியம்மன் கோயில் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட கவியரசன்(48), திருநாவுக்கரசு(38), பிரசாந்த்(34), ரமேஷ்(39), வசந்தகுமார்(36), நித்துவான்(34) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News December 29, 2025
தஞ்சாவூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News December 29, 2025
தஞ்சை: ஆட்டோ ஓட்டுநருக்கு கத்தி குத்து!

தஞ்சை கீழவாசல் பகுதியில் ஆட்டோ நிறுத்தும் இடம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக ஓட்டுநர் ஜாகிர் உசேன், அப்துல் பசீர் என்பவரை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அப்துல் பசீர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து, தஞ்சை காவல்துறையினர் ஜாகிர் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
தஞ்சை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <


