News December 26, 2025

விருதுநகர்: மனைவி பிரிவால் கணவர் எடுத்த விபரீத முடிவு

image

விருதுநகர் பெரியகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி, 35, செல்வராணி தம்பதியினர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு காரணமாக மனைவி தனது மகனுடன் தனியாக சென்று விட்டார். இதன்பின் தாயாரும் இறந்ததால் மன வேதனையில் இருந்த பாலாஜி, தந்தையுடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு உணவருந்தி விட்டு துாங்கச் செல்வதாக வீட்டின் மாடிக்குச் சென்றவர் மனைவியின் சேலையில் துாக்கிட்டு இறந்தார்.

Similar News

News December 28, 2025

விருதுநகர்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 28, 2025

விருதுநகர்: இனி Whatsapp மூலம் தீர்வு!..

image

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News December 28, 2025

சிவகாசியில் வீடு புகுந்து ஜெயின் பறிப்பு

image

சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் மாலா பிரியதர்ஷினி(44). இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அஜித்குமார், மாலா பிரியதர்ஷினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த அரைப்பவுன் தங்கதாலி, 2 பவுன் வளையலை பறித்து சென்றார். அஜித்குமார் அவரது மனைவி ஐஸ்வர்யா மீது வழக்குப்பதியப்பட்டது.

error: Content is protected !!