News December 26, 2025

அதிமுக கூட்டணி.. திடீரென முடிவை மாற்றினார்

image

NDA கூட்டணியில் தொடர்வேனா இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார். பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகு, ஜனவரி இறுதியில் கூட்டணி முடிவை எடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். EPS-ன் தென்மாவட்ட பிரசாரங்களில் பங்கேற்றிருந்த ஜான்பாண்டியன், தற்போது பிடிகொடுக்காமல் பேசியிருப்பது NDA கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 15, 2026

NIA-க்கு புதிய தலைவர் நியமனம்!

image

NIA-ன் தலைவராக மூத்த IPS அதிகாரி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 1994 இமாச்சல பிரதேச கேடர் IPS அதிகாரியான இவர், கடந்த ஆண்டு டிசம்பரில் NIA-ன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது, முழுநேர தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவர் பணி ஓய்வுபெறும் ஆக.31, 2028 வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News January 15, 2026

கனவில் கேட்ட ஆண்டாள்.. 45 சவரனை கொடுத்த பெண்!

image

நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை தரிசித்தவர்கள், ‘நகைகள் புதுசா இருக்கே’ என கவனித்திருக்கலாம். இதற்கு ஒரு பெண்ணின் பக்தியே காரணம். சிவகாசியை சேர்ந்த ஜோதிலட்சுமியின் கனவில் தோன்றி ஆண்டாள், ‘உன் நகைகளை தா’ என கேட்டாராம். கொஞ்சமும் யோசிக்காத ஜோதிலட்சுமி 45 சவரன் நகைகளை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்க, அதை கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அந்த நகைகளை அணிந்தபடி, ஆண்டாள் உற்சவத்திற்கு புறப்பட்டுள்ளார்.

News January 15, 2026

கோர ரயில் விபத்தில் 32 பேர் பலி.. 7 பேர் கவலைக்கிடம்

image

தாய்லாந்து ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 66 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். அதில், 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நேற்று காலை, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானிக்கு சென்ற <<18853608>>ரயில் மீது கிரேன் விழுந்ததில்<<>> பெரும் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!