News December 26, 2025
நெல்லை அருகே வீட்டில் ஒருவர் மர்ம மரணம்!

தாழையூத்து பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி (26). இவரது மனைவி அமுதா தனது தாய் வீட்டிற்கு கடந்த 22ம் தேதி சென்றுவிட்டு, இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டின் உள்புறம் பூட்டியிருந்த நிலையில், கணவர் நீண்ட நேரம் திறக்கவில்லை. இந்நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குமாரசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 12, 2026
நெல்லை: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் லாபம்

நெல்லை: போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். SHARE IT
News January 12, 2026
நெல்லையில் கேஸ் புக் பண்ண புது வழி!

திருநெல்வேலி மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 12, 2026
நெல்லை: அமெரிக்க கரன்சி மூலம் ரூ.20 லட்சம் மோசடி

சென்னையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் ஷாகுல் ஹமீதிடம் மாரியப்பன் என்பவர் ரூ.20 லட்சம் அமெரிக்க டிஜிட்டல் கரன்சியை மாற்றி தர கேட்டுள்ளார். இதை நம்பி ஷாகுல் ஹமீது நெல்லை வந்து 21,280 அமெரிக்க டிஜிட்டல் கரன்சியை மாரியப்பன் வாலட் கணக்கிற்கு ஏற்றியுள்ளார். ஆனால் அதற்கான ரூ.20 லட்சத்தை கொடுக்காமல் மாரியப்பன் தப்பியுள்ளார். புகாரின் பேரில் பாளை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


