News December 26, 2025

தஞ்சை: வீட்டின் கதவை உடைத்து திருடிய இருவர் கைது!

image

தஞ்சாவூரில் ராஜ்குமார் என்பவரின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 2 மடிக்கணினிகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடு போனது. இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் தஞ்சாவூர் கீழவாசலைச் சேர்ந்த சஞ்சய், விளார் சேர்ந்த மாணிக்கம் ஆகியோரை நேற்று கைது செய்து, திருடப்பட்ட பொருள்களை மீட்டனர்.

Similar News

News December 30, 2025

தஞ்சை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News December 30, 2025

தஞ்சை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

image

தஞ்சை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.

News December 30, 2025

தஞ்சை: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

error: Content is protected !!