News December 26, 2025
இராமேஸ்வரத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

ராமேஸ்வரம் மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவரது மகன் சேதுராஜா ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான விடுதியில் மாலை மின் மோட்டாரை இயக்க சென்றபோது அங்கு ஸ்விட்ச் போர்டில் உள்ள வயரில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.
Similar News
News January 27, 2026
இராம்நாடு: கரை ஒதுங்கிய மீனவர் உடல்!

திருவாடானை அருகே பாசிபட்டினத்தைச் சோ்ந்த ராஜதுரை (30). கடந்த 24ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற போது காணாமல் போனாா். இது குறித்து கடலோரக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், நேற்று எஸ்.பி.பட்டினம் அருகே கடற்கரையில் ராஜதுரையின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸாா் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
News January 27, 2026
ராம்நாடு : சமையல் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு!

இராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News January 27, 2026
பரமக்குடி & கமுதி பகுதிகளில் நாளை மின்தடை

பார்த்திபனூர், கமுதக்குடி, பிடாரி சேரி, நெல்மாத்தூர், புதுக்குடி, சுடியூர், நரிக்குடி உள்ள 33/11 என்ற துணை மின் நிலையம் மற்றும் கமுதி தாலுகா, அபிராமம், பசும்பொன், கே வேப்பங்குளம், பேரையூர், பாப்பான்குளம் உள்ள 33/11 என்ற துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் காரணமாக நாளை ஜன.28ம் தேதி காலை 9 மணி முதல் காலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.*SHARE IT


