News December 26, 2025
சேலம் திமுக நிர்வாகி சுட்டுக் கொலை!

கடந்த மாதம் 21-ம் தேதி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் , கீழ்நாடு ஊராட்சி, கிராங்காட்டை சேர்ந்த தி.மு.க. கிளைச் செயலாளர் ராஜேந்திரனை, நிலத் தகராறு காரணமாக அவரது உறவினர் ராஜமாணிக்கம் கடந்த மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். சிறையிலுள்ள ராஜமாணிக்கம் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
Similar News
News December 30, 2025
சேலம்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News December 30, 2025
சேலம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சேலம் வீரபாண்டி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்காக தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு உடலை பரிசோதனை செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்
News December 30, 2025
ஏற்காடு: கழுத்தை நெறித்து கொன்ற காதலன்!

ஏற்காடு, மாரமங்கலத்தைச் சேர்ந்த சுமதி சடலமாக மீட்கப்பட்டார். வரம்பு மீறிய காதலில் ஏற்பட்ட தகராறில், சுமதியை அவரது காதலன் வெங்கடேஷ் (22) துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்து, உடலை கோணி பையில் கட்டி குப்பனூர் மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் வீசியதாக போலீசார் விசரானையில் தெரியவந்துள்ளது. பள்ளத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


