News December 26, 2025
திமுக முக்கிய அமைச்சர் கைதாகிறாரா?

கடலூரில் அரசு பஸ் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 9 பேர் பலியான சம்பவத்தில் <<18672003>>ஓட்டுநர் தாஹா அலியின் கைது<<>> சர்ச்சையாகியுள்ளது. திமுக அரசு, TNSTC பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதை மறைக்க ஓட்டுநரை பலிகடா ஆக்குவதா என அதிமுக, பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் அத்துறையின் அமைச்சர் சிவசங்கர், மேலாளரை போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News January 10, 2026
ஊரக பணியாளர்களை அலைக்கழிக்காதீர்: அன்புமணி

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து போராடும் ஊரக & நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களுக்கு அன்புமணி ஆதரவு தெரிவித்துள்ளார். தனது X-ல் அவர், ஆண்டுதோறும் பணியை புதுப்பிக்கும் நடைமுறையை அரசு கைவிட்டு, ஊதியத்தை ₹25,000- ₹60,000 வரை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர்களை அலைக்கழிக்காமல் உடனடியாக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
News January 10, 2026
BREAKING: கனமழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் IMD கணித்துள்ளது. அதனால், மீண்டும் குடைக்கு வேலை வந்துவிட்டது நண்பர்களே!
News January 10, 2026
ஜனநாயகனை டார்கெட் செய்றாங்க: MP ஜோதிமணி

ஒரு கட்சியின் தலைவர் என்பதால் விஜய் மீது இதுபோன்ற தாக்குதல்(ஜனநாயகன் பிரச்னை) நடப்பதாக ஜோதிமணி கூறியுள்ளார். அரசியல் ரீதியாக தவெகவிற்கு என்ன மாதிரியான அழுத்தங்களை கொடுக்க முடியுமோ, அத்தனை அழுத்தங்களையும் மத்திய அரசு கொடுப்பதாக கூறிய அவர், அதற்காகவே ஜனநாயகனை டார்கெட் செய்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது என்றார். மேலும், தணிக்கை வாரியம் என்பதே தேவை இல்லாத விஷயம் எனவும் தெரிவித்துள்ளார்.


