News December 26, 2025

தேனியில் கணவரை கொலை செய்த மனைவி!

image

பல்லவராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மர் (57). இவருடைய மனைவி சந்திரா (54). இவர்களது மகன் அஜித் (27). தர்மர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு தர்மர் வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவியும், மகனும் கட்டையால் தர்மரை தாக்கி கொலை செய்தனர். கோம்பை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News December 30, 2025

தேனி: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 30, 2025

தேனி: சட்டவிரோதமாக மது விற்ற இளைஞர் கைது

image

உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக நேற்று (டிச.29) கூடலூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (26) என்பவர் அப்பகுதியில் உள்ள சிக்கன் கடையில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் விக்னேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News December 30, 2025

தேனியில் வைப்புத் தொகை தீர்வு முகாம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில், வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை தீர்வு முகாம் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் வங்கிகளில் உரிமைக் கோரப்படாத ரூ.9,45,611 வைப்புத்தொகை சம்பந்தப்பட்ட 8 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.

error: Content is protected !!