News December 26, 2025

வேலூர்: கால்வாயில் மிதந்த ஆண் பிணம்!

image

பொன்னை ஆற்றில் இருந்து கீரைசாத்து ஏரிக்கு ஆற்றுநீர் செல்லும் கால்வாயில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக பொன்னை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில், அந்நபர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (32) என்பது தெரியவந்தது. மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 28, 2025

வேலூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News December 28, 2025

வேலூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் குளத்துக்கரை தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி நித்யா (வயது 22). திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மன வேதனை அடைந்த நித்யா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 28, 2025

வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

வேலூர் மக்களே ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!