News May 1, 2024
பெரம்பலூர்: தீப்பிடித்து எரிந்த வீடு; நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் நேற்று(ஏப்.30) முத்துச்சாமி-தங்கநிலவு தம்பதியின் குடிசைவீடு தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்தது. இதனை அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், தம்பதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர், து.செயலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.
Similar News
News March 4, 2026
பெரம்பலூர்: திறனகம் எனும் சிறப்பு மையம் திறப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் “திறனகம்” எனும் சிறப்பு மையங்களை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
News March 3, 2026
பெரம்பலூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

பெரம்பலூர் மக்களே, <
News March 3, 2026
பெரம்பலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

பெரம்பலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


