News December 26, 2025
ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
ராணிப்பேட்டை: பெண்ணை கல்லால் தாக்கிய ஆசிரியர் கைது

அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்தவர் மேகவர்ணன் (58). இவர் ராமாபுரம் அரசு ஆரம்பம் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தகராறில் ஈடுபட்ட பெண்ணை மேகவர்ணன் கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அரக்கோணம் போலீசார் ஆசிரியர் கைது செய்தனர்.
News January 8, 2026
ராணிப்பேட்டையில் இன்று மின் தடையா?

ராணிப்பேட்டை துணை மின்நிலையத்தில் இன்று (ஜன.8) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக் கராஜபுரம், வானாபாடி, செட்டிதாங்கல், தண்டலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் இல்லை.
News January 8, 2026
ராணிப்பேட்டை : இரவு ரோந்து போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


