News December 26, 2025
ராம்நாடு: ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.26 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்றது. இதில் 19.01.25 SIR பட்டியல் வெளியிடப்பட்டது. 01.01.26ம் தேதியை தகுதி நாளாக கொண்டு பொதுமக்களின் வசதிக்காக வாக்காளர்களுக்கான அனைத்து பணிகளும் டிச. 27,28 மற்றும் ஜன.3,4 அனைத்து வாக்கு சாவடியிலும் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.
Similar News
News December 31, 2025
பரமக்குடி கொலை வழக்கு.. பாய்ந்த குண்டாஸ்!

பரமக்குடி சாமி செட்டியார் நந்தவனத்தை சேர்ந்த சுரேஷ் என் பவரது மகன் கார்த்திகேயன் (23) கடந்த மாதம் பரமக்குடி காய்கறி மார்க்கெட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் வினோத் (33) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் வினோத் மீது வன்கொடுமை, கொலை முயற்சி உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வினோத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News December 31, 2025
இராமநாதபுரத்திற்கு புதிய டிஐஜி நியமனம்

இராமநாதபுரம் சரக புதிய டிஐஜியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னாதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இராமநாதபுரம் சரக டிஐஜியாக தேஷ்முக் சேகர் சஞ்சய் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2012 காவல்துறை பேட்ச் அதிகாரி ஆவார்.
News December 31, 2025
இராமநாதபுரம் போலீஸ் சரக டிஐஜி டிரான்ஸ்பர்

இராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த டாக்டர் பி.மூர்த்தி ஐபிஎஸ் சென்னை அமலாக்க பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு முழுக்க பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.


