News December 26, 2025
எதிர்காலத்தில் காப்பருக்கும் டிமாண்ட் அதிகரிக்கும்

வரும் நாட்களில் காப்பரின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று, ஒரு டன் காப்பரின் விலை 12,000 டாலர்களைக் கடந்தது. மின்சார வாகனங்கள் மற்றும் மின்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு இது அத்தியாவசியமானதாக இருப்பதால், விலை அதிகரித்து வருகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் காப்பருக்கான தேவை 60% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காப்பரிலும் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்
Similar News
News January 13, 2026
பெரம்பலூர்: சனி தோஷம் நிவர்த்திக்கு சோளீசுவரர் கோயில்

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க.
News January 13, 2026
நடப்பு ஐபிஎல் சாம்பியனுக்கு வந்த சோதனை

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் IPL போட்டிகள் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதன்பிறகு பாதுகாப்பு காரணங்களால் சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்கவில்லை. இந்நிலையில் RCB அணியின் Home Game-கள் நவிமும்பை (5 போட்டி), ராய்ப்பூருக்கு ( 2 போட்டி) மாற்றப்படவுள்ளன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News January 13, 2026
பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் 1,03,123 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இவர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையாக ₹85 – ₹625 வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்கு ₹3,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


