News December 25, 2025
அரியலூர்: வண்ண விளக்குகளால் கம்யூனிஸ்ட் அலுவலகம்

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நாளை காலை 10 மணி அளவில் கட்சியின் கொடியேற்று விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
அரியலூர்: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

அரியலூர், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.
News December 30, 2025
அரியலூர்: 10th போதும்-போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 30, 2025
அரியலூர்: விவசாயிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

டெல்டா பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்களுடன், தஞ்சாவூர் ஆட்சியர் அரங்கில் நேற்று (29.12.2025) சம்பா நெல் கொள்முதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் கலந்துகொண்டு, விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தனர். இதில் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


