News December 25, 2025
மதுரை மாவட்ட ஆட்சியர் பெயரில் முகநூலில் போலி கணக்கு!

மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெயரில் சமூக வலைதளமான முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் நண்பர் கோரிக்கைகள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போலி கணக்கிற்கு பொதுமக்கள் யாரும் பதிலளிக்கவோ, நண்பர் கோரிக்கையை ஏற்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற போலி கணக்குகளை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
Similar News
News January 14, 2026
மதுரை : பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

மதுரை மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 14, 2026
கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமல்

மதுரை மாநகர் கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு, (13.01.2026) முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாகன நெரிசலைக் குறைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் மாற்றுச்சாலை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
News January 14, 2026
மதுரை: கிரிக்கெட் போட்டியில் இளைஞர் மண்டை உடைப்பு

உசிலம்பட்டி பூதிப்புரத்தை சேர்ந்தவர் மதன்குமார்(18). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் கிரிக்கெட் விளையாட்டில் தகராறு ஏற்பட்டது. இதில் கிரிக்கெட் மட்டையால், மதன் குமார் தலை, உடல் என சரமாரியாக தாக்கப்பட்டார். உசிலம்பட்டி போலீசார் அஜித்குமார்(24), புலிப்பாண்டி(23), டார்வின்(19), ஹரி(21), கல்யாணி(23), விக்னேஷ்(27), கார்த்திக்(25) என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்


