News December 25, 2025
மதுரை மாவட்ட ஆட்சியர் பெயரில் முகநூலில் போலி கணக்கு!

மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெயரில் சமூக வலைதளமான முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் நண்பர் கோரிக்கைகள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போலி கணக்கிற்கு பொதுமக்கள் யாரும் பதிலளிக்கவோ, நண்பர் கோரிக்கையை ஏற்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற போலி கணக்குகளை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
Similar News
News January 13, 2026
மதுரை: சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு.!

மதுரை பாலரெங்காபுரத்தை சேர்ந்தவர் சாந்தி (60). இவர் வீட்டில் பூஜையறையில் சாமி கும்பிடும் போது, அகல் விளக்கில் எரிந்த தீ எதிர்பாராத விதமாக சேலையில் பற்றியது. இதில் தீயில் கருகிய சாந்தியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று
உயிரிழந்தார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 13, 2026
மதுரை: மரத்தில் டூவீலர் மோதி விபத்து; ஒருவர் பரிதாப பலி..

மேலூர், நாவினிபட்டியை சேர்ந்தவர் நாராயணன்(53) உறங்கான்பட்டியில் வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். நேற்று முன்தினம், இரவு பணி முடிந்து டூவீலரில் தனியாமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழையூர் பைபாஸ் அருகே உள்ள புளிய மரத்தில் டூ வீலர் மோதியது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 13, 2026
மதுரை: மரத்தில் டூவீலர் மோதி விபத்து; ஒருவர் பரிதாப பலி..

மேலூர், நாவினிபட்டியை சேர்ந்தவர் நாராயணன்(53) உறங்கான்பட்டியில் வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். நேற்று முன்தினம், இரவு பணி முடிந்து டூவீலரில் தனியாமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழையூர் பைபாஸ் அருகே உள்ள புளிய மரத்தில் டூ வீலர் மோதியது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


