News December 25, 2025

கரூர்: பைக்கில் சென்ற இளைஞர் லாரி மோதி படுகாயம்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு தேவதானம் பகுதியைச் சேர்ந்த கண்ணனின் மகன் மாதேஸ்வரன் (27) நேற்று தனது பைக்கில் மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் விஸ்வநாதன் ஓட்டி வந்த லாரி மோதியது. இதில் மாதேஸ்வரன் படுகாயம் அடைந்தார். இவர் தற்போது கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். சம்பவம் தொடர்பாக லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 27, 2025

கரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

குளித்தலையில் அதிரடி கைது!

image

குளித்தலை கோட்டம் பாலவிடுதி மற்றும் குளித்தலை காவல் நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் லாட்டரி சீட்டு விற்ற பாலவிடுதியை சேர்ந்த கருப்பசாமி (62), குளித்தலையை சேர்ந்த செந்தில்குமார் (51) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.

News December 27, 2025

கரூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!