News December 25, 2025

கடலூர்: ஒரே கருவறையில் 18 அம்மன் கொண்ட கோயில்!

image

கடலூர் அருகே காரைக்காடு பகுதியில் பச்சைவாழியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் லில் வேறெங்கும் காணாத வகையில், ஒரே கருவறையில் 18 அம்மன்களை தரிசனம் செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் திருமண தடை நீக்க இங்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. கோயிலை சுற்றிலும் அனைத்து காவல் தெய்வங்களுக்கும் சுதை சிற்பங்கள் இருப்பது சிறப்பம்சமாகும். இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. SHARE IT!

Similar News

News December 28, 2025

கடலூர்: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

image

கடலூர் மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

கடலூர்: சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் மீது வழக்கு

image

சிதம்பரம் அருகே சிலம்பிமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (35). திருமணமான இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் வழக்கு பதிந்து, செந்தமிழ் செல்வனை தேடி வருகின்றனர்.

News December 28, 2025

கடலூர்: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE <<>>
8. வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!