News December 25, 2025
பெரம்பலூர்: விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், இறுதி அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் இரங்கலை தெரிவித்து உடற்கூறாய்வு முடித்து உடல்களை அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளனி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உடன் இருந்தனர்.
Similar News
News December 29, 2025
பெரம்பலூர்: சகல தோஷங்கள் நீக்கும் அற்புத கோயில்!

பெரம்பலூர் மாவட்டம் திருவலாந்துறையில் அமைந்துள்ளது சோழீஸ்வரர் ஆலயம், சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் உள்ள கிணற்றில் நீராடி மூலவருக்கு புது வஸ்திரம் சாற்றி, நெய் அபிஷேகம் செய்து பிராத்தனை செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News December 29, 2025
கோரிக்கையை நிறைவேற்றிய பெரம்பலூர் ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று(டிச.29) திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மூன்று சக்கர சைக்கிள் வேண்டி மனு கொடுத்த மாற்றுத்திறனாளி முதியவரின் கோரிக்கை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உடனடியாக நிறைவேற்றினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News December 29, 2025
பெரம்பலூர்: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


