News December 25, 2025

விருதுநகர்: SI, ஏட்டு மீது FIR பதிவு செய்ய உத்தரவு

image

அ.முக்குளம் எஸ்.ஐ., மணிகண்டன் வாக்கி டாக்கியை தொலைத்த விவகாரத்தில் பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த தவக்கண்ணனை திருடியதாக ஒப்புக்கொள்ள கூறி செல்போனில் மிரட்டியதுடன் பொய் வழக்கும் பதிவு செய்தனர். இதில் பொய் வழக்கு போட்ட போலீசாருக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் தவக்கண்ணன் வழக்கு தொடர்ந்தார். இதில் எஸ்.ஐ.,மணிகண்டன், போலீஸ் ஏட்டு செல்வராஜ் மீது FIR பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகரில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். ஆனால், தற்போது<> கிங்கே கிளிக் செய்து<<>> ஆன்லைன் மூலம் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு விண்ணப்பிக்கலாம். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும். இத்தகவலை SHARE பண்ணி உதவுங்க

News December 26, 2025

விருதுநகர்: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை.!

image

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க.

News December 26, 2025

சிவகாசி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

image

சிவகாசி அருகே திருத்தங்கல் கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி கற்பகம் (58). இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ச்சியாக மருத்துவம் பார்த்து மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளார். வயிற்று வலி தீராததால் மனமுடைந்த இருந்த கற்பகம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!