News May 1, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, பணி நேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடித்தல், தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை பருகவேண்டும். மேலும் அதிக அளவில் மோர், கூழ், இளநீர், எலுமிச்சைபழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவுரையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷரவன்குமார் வழங்கினார்.
Similar News
News March 11, 2026
கள்ளக்குறிச்சிக்கு துணை முதலமைச்சர் வருகை!

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாகத் திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த வருகையின் போது, மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.
News March 11, 2026
கள்ளக்குறிச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
கள்ளக்குறிச்சி: பள்ளிக்கு சென்ற மாணவி திடீர் சாவு!

சங்கராபுரத்தை சேர்ந்த சவரிநாதனின் 4 வயது மகள், தனியார் பள்ளியில் UKG பயின்று வந்தார். நேற்று முன்தினம் சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை, பெற்றோர் தேற்றி பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். பள்ளியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


